Connect with us

பொழுதுபோக்கு

மெட்டு மென்மையா‌ இருக்கு, வரிகள் கடுமையா இருக்கே சார்? வைரமுத்து – ரஹ்மான் மோதல்: கடைசியில் பாடகர் கொடுத்த டீவிஸ்ட்!

Published

on

vairamuthu rahman

Loading

மெட்டு மென்மையா‌ இருக்கு, வரிகள் கடுமையா இருக்கே சார்? வைரமுத்து – ரஹ்மான் மோதல்: கடைசியில் பாடகர் கொடுத்த டீவிஸ்ட்!

ஒரு பாடலின் வெற்றிக்கு அதன் மெட்டும், வரிகளும் ஈருடல் ஓருயிராய் இருப்பது அவசியம். ஆனால் சில சமயங்களில், மெட்டமைப்பாளர் ஒருவித உணர்வில் மெட்டை உருவாக்க, பாடலாசிரியர் வேறு ஒரு உணர்வில் வரிகளை எழுதிவிடுவதுண்டு. அப்படி ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை கவிஞர் வைரமுத்து, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணிபுரிந்த ஒரு பாடல் குறித்து பகிர்ந்துள்ளார்.வைரமுத்து வரிகளில் “சந்திரனை தொட்டது யார் நான் தானா” என்ற பாடல், ‘ரட்சகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஹரிஹரன் மற்றும் சுஜாதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவலை வைரமுத்து ஒரு மேடையில் கூறியுள்ளார். இந்த வீடியோ ராகுல் துரைசாமி யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.முதலில் அந்த பாடல் வரிகள், “நீதான் நிலவு, உன்னைத் தொட்டவன் நான்தான். அர்ம்ஸ்ட்ராங் தொட்டான் என்பது பொய்” என்று தொடங்குகிறது. இந்த வரிகளை ரஹ்மானிடம் கொடுத்தபோது, அவர் “சார், மெட்டு மென்மையா இருக்கு, ஆனா வரிகள் கல்லு மாதிரி ரொம்ப கடுமையா இருக்கு” என்று கூறியிருக்கிறார். ரஹ்மான் அன்று ஒரு மென்மையான இசையை அமைத்திருந்தாராம்.வைரமுத்து உடனடியாக பதிலளித்திருக்கிறார், “இந்த ‘ஆர்ம்ஸ்ட்ராங்’ என்ற வார்த்தை மட்டும் புதுசு. மற்றபடி பார்த்தால், இது வழக்கமான காதல் பாடல் வரிகள் போல்தான் இருக்கும். ஒருவேளை பாடகருக்கு இந்த வரிகள் கடினமாகத் தெரிந்தால், நாங்கள் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பாடகர் பாடிப் பார்ப்பதுவரை காத்திருப்போம், அவர் எப்படி இதை மென்மைப்படுத்துகிறார் என்று பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.கடைசியில், ஹரிஹரன் பாடலை பாடும்போது, “சந்திரனை தொட்டது யார் ஆர்ம்ஸ்ட்ராங்” என்ற வரிகளை அழகாக உச்சரித்து, அந்த வரிகளின் தீவிரத்தை மென்மையாக்கி, மெட்டுடன் அழகாகப் பொருந்தும்படி பாடியிருக்கிறார். ஹரிஹரனின் குரல் மற்றும் பாடும் பாங்கு, ரஹ்மான் கடுமையாக உணர்ந்த வரிகளுக்கு மென்மையையும் உயிரோட்டத்தையும் கொடுத்தது.இது ஒரு இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இணைந்து ஒரு படைப்பை உருவாக்கும்போது நடக்கும் சுவாரஸ்யமான சவால்களையும், ஒரு பாடகரின் திறமை எவ்வாறு ஒரு பாடலின் உணர்வை முற்றிலும் மாற்றியமைக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்து பல வெற்றிப் பாடல்களைத் தந்திருந்தாலும், இதுபோன்ற படைப்பு மோதல்கள் மட்டுமே ஒரு பாடலை செதுக்கும் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன