இலங்கை
அடிப்படை உரிமைகளை மீறினார் ரணில்; உயர்நீதிமன்றம் அறிவிப்பு

அடிப்படை உரிமைகளை மீறினார் ரணில்; உயர்நீதிமன்றம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் விதிக்கப்பட்ட அவசரகாலத் தடைச்சட்டங்கள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி அன்று போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.