Connect with us

இலங்கை

கோடாவுடன் இளைஞன் கைது!

Published

on

Loading

கோடாவுடன் இளைஞன் கைது!

ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியகந்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இளைஞன் ஒருவர் ஹொரணை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர் பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஆவார். 

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து   1050 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன