Connect with us

இலங்கை

தொல்லியல் மரபுரிமைகளைப் பேணுவோம்: யாழில் தொல்லியல் தின நிகழ்வு

Published

on

Loading

தொல்லியல் மரபுரிமைகளைப் பேணுவோம்: யாழில் தொல்லியல் தின நிகழ்வு

தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் இன்றைய தினம் (23.07.2025) நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், எமது வரலாற்று
தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும், தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையுமென்றும் குறிப்பிட்டார்.

Advertisement

யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள் எனவும், பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை எனவும், மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது எனவும், ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளதாகவும், காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும் எனவும் அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில் கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள் எனவும் தெரிவித்தார். 

மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது எனவும், தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டதுடன், பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.

மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் எமக்கு கிடைப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டு எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

Advertisement

யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் “வேரும் விழுதுகளும்” விருதினை மூவருக்கு வருடாந்தம் வழங்கும் திட்டத்தினை யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்களம் அறிமுகப்படுத்தி இருந்தது.

இதன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகளை யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான திரு. மார்க்கண்டு
அருட்சந்திரன், விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளருமான திருமதி
அஜந்தா சுப்பிரமணியம், மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான திருமதி பாலயோகஸ்தினி சிவயோகநாதன் ஆகியோர் தொல்லியல் மரபுரிமைகளை பேணி பாதுகாத்தமைக்காக அரசாங்க அதிபரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபை உதவிப் பணிப்பாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை பீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர், தொல்லியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் ஆகியோரும் யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

இந் நிகழ்வில் பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1753307268.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன