இலங்கை
பலத்த காற்று!

பலத்த காற்று!
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.