Connect with us

இலங்கை

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published

on

Loading

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  இன்று (23.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில நேரங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் கவனமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன