இலங்கை
வெலிக்கடைப் படுகொலைகள் விசாரிக்கப்படுவது அவசியம்; செல்வம் எம்.பி. கோரிக்கை!

வெலிக்கடைப் படுகொலைகள் விசாரிக்கப்படுவது அவசியம்; செல்வம் எம்.பி. கோரிக்கை!
தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்ட வெலிக்கடைச்சிறைப்படுகொலை தொடர்பில் விசாரணை என்று நாடாளுமன்ற நடத்தப்படுவது அவசியம் உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டார்கள். எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை இன்னமும் அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்த கால கொலைகளைப் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடைச் சிறைப்படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது – என்றார்.