Connect with us

இலங்கை

இனப்படுகொலைக்கு சஜித் தான் காரணம் – தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வெளிப்படை!

Published

on

Loading

இனப்படுகொலைக்கு சஜித் தான் காரணம் – தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வெளிப்படை!

செம்மணி இனப்படுகொலை 1983 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவினால் தான் நடாத்தப்பட்டது என்று மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்  வெளிப்படையாகாத் தெரிவித்துளார். 

நேற்று இடம்பெற்ற மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரான லோ.ரமணன் செம்மணி உட்பட ஏனைய இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

Advertisement

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான வினோத்தனு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

 தனு “இது தேவையற்ற விடயம். இந்த விடயம் இதில் கதைக்கப்பட தேவையில்லை. இந்த இனப்படுகொலை 1983ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவினால் தான் நடாத்தப்பட்டது. நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக இந்த விடயம் பேசப்பட்டது” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான செ.ஞானரூபன் “ரமணனின் தாய் கட்சிதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அவரை ஏன் கதைக்க அனுமதித்தீர்கள்” என கூறினார். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் மௌனம் காத்தனர்.

Advertisement

இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர், “ஒருவர் வெளிநடப்பு செய்யும்போது அதற்கான காரணத்தை கூறிவிட்டு வெளிநடப்பு செய்யலாம். அது அவரது உரிமை. அதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை இல்லை. அவர் இல்லாத இடத்தில் அவர் தொடர்பான விடயங்களை பேசுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அவர் சபைக்கு வந்த பின்னர், அந்த விடயங்கள் பேசப்படும்போது அதுகுறித்து பேசலாம் என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன