Connect with us

இலங்கை

காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி – கிளிநொச்சியில் சமப்வம்!

Published

on

Loading

காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி – கிளிநொச்சியில் சமப்வம்!

கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி காவல்  நிலையத்தில் இன்றைய தினம் 25.07.2025 குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

விசாரணைகளுக்காக காவல் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம்12.08மணி அளவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய  இரத்தினம் ராசு என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்தவர் என்றும், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன