Connect with us

இலங்கை

திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பரிசோதகர்கள்

Published

on

Loading

திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பரிசோதகர்கள்

  முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று இன்றையதினம் (25) மேற்கொள்ளப்பட்டிருந்து.

Advertisement

முத்தையன்கட்டு வலதுகரை, முத்தையன்கட்டு இடதுகரை பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முத்தையன்கட்டு பொதுச் சுகாதார பரிசோதகர் லோஜிதன், ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோர் இந் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன