இலங்கை
மன்னார்- இராமேஸ்வரம் படகுச்சேவைக்கு உதவத்தயார்; சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு!

மன்னார்- இராமேஸ்வரம் படகுச்சேவைக்கு உதவத்தயார்; சாணக்கியன் எம்.பி. தெரிவிப்பு!
மன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவைக்கு அரசாங்கம் அனுமதித்தால் அதற்கான நிதியைத் தர நாம் தயாராக உள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார். அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத போக்குவரத்து அமைச்சர் காங்கேசன்துறை இந்தியா கப்பல் சேவை தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பில் போக்குவரத்து அமைச்சருக்கு விளக்கிய நான், போக்குவரத்து அமைச்சு இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தினால், மன்னார் இராமேஸ்வரம் படகுச்சேவையை மீண்டும் தொடங்க நிதிக்கான பங்களிப்பைப் பெறுவதற்கு நாங்கள் உதவமுடியும் எனக் குறிப்பிட்டேன். இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல் விடயத்தில் இந்தியாவும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றது. இதுதொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்- என்றார்.