Connect with us

இலங்கை

யாழ். தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

Published

on

Loading

யாழ். தாவடி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக  வியாழக்கிழமை (24) இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (25)  மண்டைதீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கத்திக் குத்துக்கு இலக்காகிய சுதுமலை மத்தி, மானிப்பாயைச்  சேர்ந்த 45 வயதுடைய நபர் மருத்துவமனையில் சேரக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்தார்.

Advertisement

தாவடியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. 

இதன்போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேரக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (25) பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன