இலங்கை
விமானப்படை அதிகாரியிடம் கலைஞர் ஒருவர் செய்த தவறான செயல்

விமானப்படை அதிகாரியிடம் கலைஞர் ஒருவர் செய்த தவறான செயல்
இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் வினோத் தரங்கா நேற்று (24) கைது செய்யப்பட்டார்.
இரண்டு நபர்களிடமிருந்து தலா 30,000 ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
மத்துகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு விமானப்படை அதிகாரியும் தாக்கல் செய்த முறைபாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.