Connect with us

இலங்கை

வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் விழுந்த கார் – மூவர் காயம்!

Published

on

Loading

வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் விழுந்த கார் – மூவர் காயம்!

பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

Advertisement

காயமடைந்தவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்த 64, 58 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து ஒக்கம்பிட்டி பகுதிக்கு தான நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் பதுளைக்கு திரும்பும் போது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கார் விபத்துக்குள்ளாகும் போது காரில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன்,  பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Advertisement

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. 

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன