இலங்கை
கொட்டகலையில் கால்வாயில் விழுந்து 04 வயது சிறுமி பலி!

கொட்டகலையில் கால்வாயில் விழுந்து 04 வயது சிறுமி பலி!
திம்புலபத்தனை பொலிஸ் பிரிவின் ரோசிட்டா வட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் விழுந்து ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை, ரோசிட்டா வட்ட பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சடலம் டிக்கோயா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திம்புலபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை