இலங்கை
சூதாட்ட குற்றச்சாட்டில் 16 பேர் கைது

சூதாட்ட குற்றச்சாட்டில் 16 பேர் கைது
களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையும் அவரின் தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.