Connect with us

இலங்கை

மாயமான தமிழ் இளைஞன் ; பொலிஸாரின் அலட்சியத்தால் தவிக்கும் குடும்பம்

Published

on

Loading

மாயமான தமிழ் இளைஞன் ; பொலிஸாரின் அலட்சியத்தால் தவிக்கும் குடும்பம்

கொக்கிளாய் கடலிற்கு தொழிலிற்கு சென்ற இளைஞன் கடலில் மாயமாகிய சம்பவம் நேற்று  (25) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கொக்கிளாய் கடலிற்கு நேற்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் கடற்தொழிலுக்கு 5 பேர் சென்ற நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

Advertisement

தொழிலுக்கு போய் கடலில் இறங்கியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் தற்போது வரை கிராம மக்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் இணைந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

குறித்த சம்பவத்தில் கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் 23 வயதுடைய இளைஞனே மாயமாகியுள்ளார்.

 குறித்த இளைஞன் தொடர்பாக கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை அவ் இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என்று காணாமல் போன இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன