Connect with us

இலங்கை

மின் தூக்கி செயலிழப்பு – கிளிநொச்சி மாவட்டமருத்துவமனையில் கடும் அவதி!

Published

on

Loading

மின் தூக்கி செயலிழப்பு – கிளிநொச்சி மாவட்டமருத்துவமனையில் கடும் அவதி!

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த நான்கு நாட்களாக செயலிழந்த நிலையில் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்திர சிசிக்சை கூடம், அவசர சிகிச்சை, உள்ளிட்டவற்றுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, சிகிச்சை நிறைவுற்றதும் விடுதிகளுக்கு மீளவும் அழைத்து வருவது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட மின் தூக்கியே இவ்வாறு செயலிழந்துள்ளது.

Advertisement

இதனால் ஊழியர்களை நோயாளிகளை படிகட்டு வழியாக சுமந்து செல்வதும் சிகிச்சை நிறைவுற்றதும் அங்கிருந்து மீளவும் சுமந்து செல்வதும் என ஊழியர்களும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

அத்தோடு ஆபத்தான சத்திர சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், மற்றும் நடமாட முடியாத நோயாளிகள் என பலரும் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவமனையில்  ஒரேயொரு மின்தூக்கியே பயன்பாட்டில் இருப்பது பலரிடமும் விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருத்தும்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

Advertisement

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன