இலங்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணைகளில் முன்னேற்றம் அமைச்சர் சமந்த தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; விசாரணைகளில் முன்னேற்றம் அமைச்சர் சமந்த தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட அனைவரும் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நன்கு அறிவார்கள். இதனுடன் தொடர்புடைய சுத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக் காலங்களில் இந்த விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மையே காணப் பட்டது. கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இன்று சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீண்டகாலத்தை எடுத்துக்கொள்ளாது விரைவில் இந்த உண்மைகள் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படும் – என்றார்.