Connect with us

இலங்கை

தான் கேட்டதை செய்யவில்லை; மசாஜ் நிலைய பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

Published

on

Loading

தான் கேட்டதை செய்யவில்லை; மசாஜ் நிலைய பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

   வாதுவை, தல்பிட்டிய பிரதேச மசாஜ் நிலையத்திற்கு சென்று பணிப்பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த மசாஜ் நிலையத்திற்கு சென்று, தான் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அங்கிருந்த பணிப்பெண் ஒருவரிடம் கூறியபோது
மசாஜ் நிலைய பணிப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மசாஜ் நிலைய பணிப்பெண்ணை பலமாக தாக்கி அங்கிருந்த 27 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

காயமடைந்த பணிப்பெண் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் வாதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன