Connect with us

இலங்கை

பொரளை விபத்து தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்

Published

on

Loading

பொரளை விபத்து தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்

  பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

குறித்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், ஏனைய 5 பேர் ஆண்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

Advertisement

ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் ஒன்று, பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

விபத்துக்கு காரணமான கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கிரேன் வாகனத்தில் பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன