இலங்கை
கடற்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அபராதம்

கடற்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அபராதம்
நாட்டின் கடற்கரையோரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க சட்டவிதிகள் கொண்டுவரப்படும் என கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்காக, ஆண்டுதோறும் அனுமதிப்பத்திரமொன்றையும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
கடற்கரையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வலயத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை தகர்ப்பதன் மூலம், கடலோர பகுதிக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.