இலங்கை
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு
நாட்டில் பல பகுதிகளில் இன்று (30) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை இன்றைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.