Connect with us

இந்தியா

‘பாகிஸ்தானை எதிர்கொள்ள அரசியல் மன உறுதி இல்லை’: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராகுல் பேசிய முக்கிய புள்ளிகள்

Published

on

Rahul Gandhis top quotes on Op Sindoor Tamil News

Loading

‘பாகிஸ்தானை எதிர்கொள்ள அரசியல் மன உறுதி இல்லை’: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராகுல் பேசிய முக்கிய புள்ளிகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் மக்களவையில் இன்று செவ்வாய்க்கிழமை அனல் பறந்தது. அப்போது பேசிய எதிர்க் கட்சித் தலைவரான ராகுல்காந்தி, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை கையாண்டது குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானை எதிர்கொள்ள அரசியல் மன உறுதி இல்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டது பாகிஸ்தான் ஜெனரல் அசிம் முனீர் எனவும் அவர் குறிப்பிட்டார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் மக்களவையில் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தொடங்கிய ராகுல் காந்தி, எதிர்க் கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு, இந்திய ராணுவத்திற்கு மலை போன்ற உறுதியான ஆதரவை அளித்தன என்று கூறினார். தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்போது மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பேசிய 10 முக்கிய புள்ளிகள் பின்வருமாறு:- 01ராஜ்நாத் சிங் பேச்சை மேற்கோள் காட்டிய ராகுல் காந்திஆபரேஷன் சிந்தூர் அதிகாலை 1:05 மணிக்குத் தொடங்கியது என்றும், அதிகாலை 1:35 மணிக்குள், இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு போன் செய்து, ராணுவம் அல்லாத இலக்குகளைத் தாக்கிவிட்டோம் என்றும், நாங்கள் தீவிரத்தை விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங்’ கூறினார். இவை எனது வார்த்தைகள் அல்ல. இவை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரின் வார்த்தைகள். 02விமானிகளின் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டச் செய்தார்கள்நீங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றீர்கள். நமது விமானிகளை அங்கு அனுப்பி பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பைத் தாக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். நமது விமானிகளை அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்பை எதிர்கொள்ளச் சொன்னீர்கள், அதாவது, அவர்களின் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டியிருக்கிறீர்கள்,03புதிய இயல்புபஹல்காம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மதிய உணவு அருந்தியது புதிய இயல்பு.04சீனாவும் பாகிஸ்தானும் இணைந்துள்ளனஇந்திய ராஜதந்திரத்தின் மிக முக்கியமான அம்சத்தை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சீனாவும் பாகிஸ்தானும் இணைந்துள்ளன. இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் சண்டையிடுவதாக நினைத்தது, அவர்கள் வந்தபோது அவர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் சண்டையிடுவதை உணர்ந்தனர். 05அதுதான் சரணடைதல்நீங்கள் பாகிஸ்தானைத் தாக்கினீர்கள், அதே நேரத்தில் உங்கள் ராணுவத்தையோ அல்லது வான் பாதுகாப்பு அமைப்புகளையோ நாங்கள் தாக்கப் போவதில்லை என்று அவர்களிடம் சொன்னீர்கள். அது சூழ்ச்சி சுதந்திரம் அல்ல; அதுதான் சரணடைதல். 06விமானங்கள் தொலைந்து போயினபாகிஸ்தானில் உள்ள ராணுவ மற்றும் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பைத் தாக்க வேண்டாம் என்று முடிவு செய்து அரசியல் தலைமை ஆயுதப்படைகளின் கைகளைக் கட்டியதால் விமானங்கள் தொலைந்து போயின.07அந்த ஐந்து விமானங்களையும் இழந்தோம் மக்களவையில் சீனா மற்றும் பாகிஸ்தான் பற்றி நான் கூறியதை நீங்கள் கேட்டிருந்தால், அந்த ஐந்து விமானங்களையும் இழந்திருக்க மாட்டீர்கள். 08டிரம்ப் பொய்யர் என்பதை மோடி மறுக்க வேண்டும்இந்தியா-பாகிஸ்தான் இடையே 29 முறை போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்; அவர் பொய் சொன்னால், பிரதமர் மக்களவையில் அதைச் சொல்ல வேண்டும். பிரதமர் மோடிக்கு இந்திரா காந்தியின் தைரியம் இருந்தால், டிரம்ப் ஒரு ‘பொய்யர்’ என்றும், நாங்கள் எந்த விமானங்களையும் இழக்கவில்லை என்றும் மக்களவையில் அவர் மறுக்க வேண்டும்.09யு.பி.ஏ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்…பஹல்காமிற்குப் பிறகு ஒரு நாடு கூட பாகிஸ்தானைக் கண்டித்ததாக ஜெய்சங்கர் எங்களிடம் சொல்லவில்லை, அதாவது உலகம் நம்மை பாகிஸ்தானுடன் சமன் செய்கிறது. யு.பி.ஏ அரசாங்கம் இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது மிகவும் தெளிவாக இருந்தது; அதற்காக நாடுகள் பாகிஸ்தானைக் கண்டித்தன.10தைரியம் இல்லாத பிரதமரை ஏற்றுக்கொள்ள முடியாதுராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய அளவுக்குப் பயன்படுத்த தைரியம் இல்லாத பிரதமரை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டிற்கு ஆபத்தான தனது பிம்பத்தைப் பாதுகாக்க ஆயுதப் படைகளைப் பயன்படுத்தும் பிரதமர், தேசிய நலனுக்காகப் படைகளைப் பயன்படுத்த வேண்டும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன