Connect with us

இலங்கை

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி விபத்து ; நால்வர் காயம்

Published

on

Loading

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி விபத்து ; நால்வர் காயம்

நுவரெலியா லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் இன்று (29) அதிகாலை முச்சக்கவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisement

ஊவாக்கலையிலிருந்து, மெரயா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன