இலங்கை
இலங்கையில் சாரதிகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம் ; வெளியான தகவல்

இலங்கையில் சாரதிகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம் ; வெளியான தகவல்
ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டத்தை பின்பற்றாத பஸ்களின் உரிமங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஆண்டுதோறும் 2,350 பேர் விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 6,000 பேர் படுகாயமடைவதாகவும் தெரிவித்த அமைச்சர், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
2011 முதல் அமுலில் உள்ள ஆசன பட்டி சட்டம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும், பஸ்களில் ஆசன பட்டி இருந்தும் பயணிகள் அதனை பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை மதிக்காத பஸ்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.