Connect with us

இலங்கை

சிறைக்கு செல்லும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர்

Published

on

Loading

சிறைக்கு செல்லும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர்

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான்  நேற்று  (29) உத்தரவிட்டுள்ளார்.

டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் போலி முறைப்பாடு ஒன்றை வழங்கியமை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர்  திங்கட்கிழமை (28) மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Advertisement

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி சுகயீனம் காரணமாக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன