இலங்கை
தவறான முடிவால் உயிரிழப்போர் அதிகரிப்பு

தவறான முடிவால் உயிரிழப்போர் அதிகரிப்பு
நாட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உயிரை மாய்த்துக்கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
வாழ்க்கையில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல.
எனவே, உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பவர்கள் உடனடியாக மனநல வைத்தியர்களை நாடுவது அவசியமாகும்.
மன ரீதியாக பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயலும் நபர்கள் தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.