இலங்கை
மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கின்றது அரசு; தயாசிறி சுட்டிக்காட்டு!

மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கின்றது அரசு; தயாசிறி சுட்டிக்காட்டு!
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் பதவிக்காலத்தை நிறைவுசெய்தவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளனர். இருப்பினும் அந்தப் பிரேரணைகள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்- என்றார்.