இலங்கை
மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் துயரம்

மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் துயரம்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் சந்தைக்கு பின்புறமாகவுள்ள வாய்க்காலினுள் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மூதூர் பாலநகரைச் சேர்ந்த 43 வயதுடையரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று (30) அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்கச் சென்றதாக தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.