இலங்கை
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; ஆலயத்திற்கு சென்றவருக்கு நடந்தது என்ன?

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; ஆலயத்திற்கு சென்றவருக்கு நடந்தது என்ன?
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 27 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.