Connect with us

இலங்கை

வீதியின் ஓரத்தில் நின்ற வாகனங்களை மோதிய லொறி; இருவர் பலி!

Published

on

Loading

வீதியின் ஓரத்தில் நின்ற வாகனங்களை மோதிய லொறி; இருவர் பலி!

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. 

Advertisement

விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. 

குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன