இலங்கை
அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கடற்பரப்பில் கண்காணிப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே பத்தலங்குண்டுவா மற்றும் மன்னார் வடக்குப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த அந்த 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கதை வலியுறுத்தியுள்ளார்.