இலங்கை
ஆசனப்பட்டி கட்டாயம்!

ஆசனப்பட்டி கட்டாயம்!
பஸ்களில் ஆசனப்பட்டி கட்டாயமாக்கும் சட்டவிதிகளை விரைவில் கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படியாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் வாகன விபத்துகளால் சுமார் 2,350 பேர் உயிரிழக்கின்றனர். அதனாலேயே போக்குவரத்து அமைச்சு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தில் ஆசனப்பட்டி ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.