இலங்கை
மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண்!

மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண்!
மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நகர் நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 24ம் திகதி காலை குறித்த பெண் தனது வீட்டின் முன்னாள் உள்ள வீதியின் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்தெடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து வீதியில் வீழ்ந்தவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பெற்று வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று ஆராய்ந்ததுடன்,
மட்டு.போதனா மருத்துவமனைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த கொள்ளையர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.[ஒ]