இலங்கை
மானிப்பாய் பரிஷ் லயன்ஸ் கழகத்தின் 40ஆவது ஆண்டு விழா!

மானிப்பாய் பரிஷ் லயன்ஸ் கழகத்தின் 40ஆவது ஆண்டு விழா!
மானிப்பாய் பரிஷ் லயன்ஸ் கழகம் தனது 40ஆவது சின்னம் சூட்டுதல் மற்றும் 40ஆவது ஆண்டு விழாவையும் இன்று மாலை 6.30மணியளவில் சுதுமலை அமைந்துள்ள குபேர மஹால் மண்டபத்தில் நடத்தவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக லயன் மாவட்டம் 306 D12இன் முதலாவது உப மாவட்ட ஆளுநர் லயன் தி உதயசூரியன் பாரியாருடன் கலந்துகொள்ள உள்ளார் என்பதுடன் கெளரவ விருந்தினராக நவாலி சென் பீற்றேஸ் பாடசாலை அதிபர் ரமேஷும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில் சில சமூகம்சார் கல்விசார் செயற்திட்டங்களும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.