Connect with us

இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகள் சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் வர்த்தமானி வெளியீடு!

Published

on

Loading

முன்னாள் ஜனாதிபதிகள் சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் வர்த்தமானி வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்டவரைவிற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், குறித்த சட்டவரைபை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Advertisement

இந்நிலையில் முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை திறம்பட நிறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஐந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு எம்.பி.க்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு சட்டவரைவுகள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன