இலங்கை
மூதாட்டியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!!

மூதாட்டியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு!!
நீர்வேலி வடக்குப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டியொருவர் கிணற்றில் இருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அருந்தவரத்தினம் சத்தியானதேவி (வயது 70) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அவர் நீண்ட நாள்களாக சுகவீனமுற்றிருந்தார் என்று மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.