Connect with us

இலங்கை

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்திய புதிய பொறிமுறை

Published

on

Loading

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்திய புதிய பொறிமுறை

  பொதுப்போக்குவரத்து தொடர்பான பயணிகளின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் முறைப்பாடுகளை சேகரிக்க , இலங்கை போக்குவரத்து சபை ஒரு புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருப்பதாக போக்குவரத்து சபையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குலதிலக்க தெரிவித்தார்.

Advertisement

அதன்படி 0704775030 என்ற வாட்சப் இலக்கம் அல்லது 1958 மற்றும் www.sltb.lk அல்லது http://www.sltb.lk எனும் வலைத்தளம் ஊடாக பயணிகள் புகார்களைப் பதிவு செய்யலாம் மற்றும் அவர்களின் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த முயற்சி பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் சேவை தரத்தை மேம்படுத்த  முடியும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன