Connect with us

இலங்கை

இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை

Published

on

Loading

இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை

 இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 7 பேர் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை, வெலிமடை பிரதேசத்தில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

கைதானவர்களில், திருமணமான தம்பதி ஒன்றும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெலிமடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தம்பதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏனைய 5 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர்கள் 24 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 620 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன