இலங்கை
உணவகத்துக்குள் அத்துமீறி அட்டூழியம் ; உரிமையாளருக்கும் கொலை மிரட்டல்

உணவகத்துக்குள் அத்துமீறி அட்டூழியம் ; உரிமையாளருக்கும் கொலை மிரட்டல்
வாரியபொல – பாதெனிய பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உணவகம் ஒன்றுக்கு, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், உணவகத்தின் உரிமையாளரின் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தாக்குதலில் உணவகத்திலிருந்த உடைமைகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாகவும் இதுபோன்ற கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.