Connect with us

இலங்கை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Published

on

Loading

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

  விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்புடன் வயோதிபர் இருவரும், சட்டவிரோத தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக
இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

அதன்போது விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் உள்ள கசிப்பு விற்பனை நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு விற்பனைக்காக போத்தலில் வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும்   ஆவணங்களும் இன்றி இருந்த உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் விசுவமடு ரெட்பானா பகுதியைச் சேர்ந்த 51, 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் நாளைய தினம் (03) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன