இலங்கை
யாழில் CID அதிகாரிகளை நோட்டமிட்ட கடற் படையினர் ; வெளியான அதிர்ச்சி காரணம்

யாழில் CID அதிகாரிகளை நோட்டமிட்ட கடற் படையினர் ; வெளியான அதிர்ச்சி காரணம்
கடற்படை குழுவினரால் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப்புலனாய் அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவு பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை விசாரிக்க பருத்தித்துறைக்கு விசாரணை அதிகாரிகள் சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும், விசாரணையில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குற்றப்பபுலனாய்வு பிரிவு மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பின் தொடர்தலை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவரால் அவர்களைப்பின் தொடர்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவிடம் தெரிவித்தனர்.