இலங்கை
ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி ; கிரிக்கெட் பேரவை வெளியிட்ட அட்டவணை

ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி ; கிரிக்கெட் பேரவை வெளியிட்ட அட்டவணை
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை இன்று (02) வெளியிட்டுள்ளது.
இதன்படி அபுதாபி மற்றும் டுபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 8 போட்டிகள் அபுதாபியிலும், 11 போட்டிகள் டுபாயிலும் நடைபெறவுள்ளன.
அத்துடன் குழு Aயில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும், B குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.