Connect with us

இலங்கை

ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்

Published

on

Loading

ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபை 66% லாபத்தை பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை 14,691 மில்லியன் ரூபாவினை இலாபமாக பதிவு செய்தது.

Advertisement

இந்தநிலையில் இந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் அந்த தொகை 24,418 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த உயர்வுக்கு பெரும்பாலும் கொழும்பு துறைமுகத்தில் அதிகரித்த சரக்கு கையாளுதல் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் பாதியில், கொழும்பு துறைமுகம் 4 மில்லியனுக்கும் அதிகமான இருபது அடிக்கு சமமான கொள்கலன்களை கையாண்டது.

Advertisement

அந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 8 மில்லியன் கொள்கலன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், தெற்காசியாவின் முக்கிய கடல்சார் மையமாக கொழும்பு துறைமுகம் தமது நிலையை வலுப்படுத்தி வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவிக்கின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன