இலங்கை
முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!
முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!
முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
” முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்
முன்னாள் அரசியல்வாதிகளின் சுமை மக்களின் தோள்களில் சுமத்தப்படுவது நியாயமற்றது என்றும் எம்.பி.க்களின் ஓய்வூதியம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தனது கட்சி தெரிவித்திருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், ஓய்வூதியம் இரத்து செய்யப்படுவதால் எந்த எம்.பி.யும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்கள் வாழ முடியாவிட்டால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.