இலங்கை
யாழ். நல்லூரானை தரிசித்த பிரதமர் ஹரிணி!

யாழ். நல்லூரானை தரிசித்த பிரதமர் ஹரிணி!
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ். நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (03) காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (02) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மிகவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நல்லூர் முருகன் ஆலத்திற்கு வருகை தந்திருந்துள்ளார்.
பிரதமருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.
மேலும், இதன் போது பொது மக்களுடனும் பிரதமர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.