Connect with us

உலகம்

இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிடமாட்டோம்-ஹமாஸ்!

Published

on

Loading

இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிடமாட்டோம்-ஹமாஸ்!

இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2ஆவது ஆண்டை நெருங்கி உள்ளது.

இப்போரில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

Advertisement

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்பட வில்லை.போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்துள்ளார்.ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிடமாட்டோம். 

Advertisement

ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட்டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காசாவில் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இதற்கிடையே நிவாரண உதவி விநியோக மையங்கள் அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன