இலங்கை
கல்முனையில் திடீர் சோனை நடத்திய பொலிஸார் – 12 மோட்டார் சைக்கில்கள் பறிமுதல்!

கல்முனையில் திடீர் சோனை நடத்திய பொலிஸார் – 12 மோட்டார் சைக்கில்கள் பறிமுதல்!
அம்பாறை மாவட்டம் கல்முனையில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 12 மோட்டார் சைக்கில்கள் கைப்பற்றப்பட்டதுடன், 93 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை மற்றும் கடற்கரை வீதி போன்ற இடங்களில் இந்த திடீர் சோனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாக செல்வது மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை