இலங்கை
செம்மணியில் மனித உரிமை ஆணைக்குழு!!!

செம்மணியில் மனித உரிமை ஆணைக்குழு!!!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த, கனகராஜ் உள்ளிட்ட குழுவினரே நேரில் பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையடலிலும் ஈடுபட்டனர்.